சென்னை ராயப்பேட்டை, அசாத் நகர் அருகில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய் அருகில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியாக செல்பவர்கள் மூக்கை மூடி கொண்டு செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளதால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்