கடும் துர்நாற்றம்

Update: 2024-03-03 12:51 GMT

சூலூர் மார்க்கெட் சாலையில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோட வழியின்றி போய்விட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்