தெருக்களில் தேங்கிய கழிவுநீர்

Update: 2024-02-25 12:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம், வேண்பாக்கம் கிராமம் பள்ளத் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருகளில் தேங்கிவிடுகிறது. இதனால், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதி வழியாக மக்கள் கடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைகின்றனர். இதனால், குழந்தைகள், பெரியவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்