சென்னை, புளியந்தோப்பு பகுதியில் உள்ள வி.ஓ.சி. நகர் 5-வது தெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி, மீண்டு கழிவுநீர் தேங்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.