சாலையில் கழிவுநீர்

Update: 2024-02-25 12:38 GMT

சென்னை தரமணி, பெரியார் நகர் கென்னடி தெருவில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய் சேதமடைந்தது. இதனால், கழிவுநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் துர்நாற்றம் அதிகஅளவு வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்