கடும் துர்நாற்றம்

Update: 2024-02-25 12:10 GMT

கோவை தடாகம் ரோடு இடையர்பாளையத்தில் செங்காடு நீலியம்மன் கோவில் வீதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி இருப்பதோடு புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்