தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-02-18 10:58 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகரில் கழிவுநீர் வாய்கால் வசதிகள் இல்லாததால் இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதுடன், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிக அளவு குடியிருப்பில் உள்ளவர்கள் வாய்கால் வெட்டி அதில் கழிவுநீரை தேக்கி விடுகின்றனர். இதனால் கொசுத்தெல்லை அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்