கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-02-11 17:38 GMT
கடலூர் வண்டிப்பாளையம் அம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை திறந்த நிலையில் கிடக்கிறது. மேலும் அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுவதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்