செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, குமரபுரம் பெரியார் நகர் 3-வது தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துா்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு அதிக அளவு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலம் கருதி சம்மந்தப்பட்ட துறை அதிகாாிகள் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.