கொசுத்தொல்லை

Update: 2024-02-11 12:48 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி கூட்டுறவு வங்கி சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், கால்வாயை தூர்வார முன்வரவில்லை. எனவே இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்