சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-02-04 17:18 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் 4-வது வார்டு அம்பேத்கர் நகர்- மயான வழி செல்லும் தார் சாலையின் அடியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யும் வகையில் மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அந்த மூடி வழியாக கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்