கொசுத்தொல்லை

Update: 2024-02-04 12:34 GMT

கிணத்துக்கடவு அருகே பெரிய நெகமம் தாராபுரம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில், அருகில் உள்ள கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. அதோடு கடும் துர்நாற்றம் வீசுவதால், அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கழிவுநீர் கால்வாய் அடைப்பை உடனடியாக சரி செய்ய அதிகரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்