தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2024-02-04 12:08 GMT

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி ஆய்குடி இணைப்பு சாலையோரத்தில் நூரியாலைன் பகுதியில் பாதாள சாக்கடை குழி திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்து விடும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்