கழிவுநீர் கால்வாய் தேவை

Update: 2024-01-28 17:23 GMT
விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் உள்ள விழுப்புரம் -திருக்கோவிலூர் சாலையில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்