தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-28 17:17 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கால்வாய் முழுவதும் குப்பைகளாக காணப்படுகிறது. இதன் காரணமாக கழிவுநீர் வழிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பள்ளிக்கூடத்தில் மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், கால்வாயில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்