சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-01-28 12:47 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தவிட்டுமேடு பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோட முறையான கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுவதை தடுக்க, அந்த பகுதியில் கால்வாய் வசதியை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்