கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

Update: 2024-01-21 17:02 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய 27-வது வார்டில் சங்ககிரி மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்