தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-14 14:43 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகர் 2-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றத்தால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. உடனே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் வழி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்