சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2024-01-14 12:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கீரனூர் சாலையில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால், சாலையோரத்தில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை செல்ல வழி இன்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்