தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-14 11:41 GMT

அரியலூர் மாவட்டம், எருத்துகாரன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் 3-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்