சுகாதார சீர்கேடு

Update: 2024-01-14 07:48 GMT

குளச்சல் அடுத்த ரீத்தாபுரம் அடுத்த சைமன் காலனியில் இருந்து யூதா காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருவதுடன், மண் தொண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீரும் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரத்தில் காணப்படும் குப்பையையும், அதன் அருகில் பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி பள்ளத்தை நிரப்பிடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாகர் ஷலால், யூதா காலனி.

மேலும் செய்திகள்