தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-07 12:50 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் தெற்கு நகர், பேக்கரி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. கழிவுநீர் செல்ல முடியாமல் தாழ்வான பகுதிகளில் சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்