கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-12-31 18:06 GMT
குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டை மேற்குகாலனியில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்