கொசு தொல்லை

Update: 2023-12-31 12:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், கோத்திரப்பட்டி ஊராட்சி மலைக்குடிபட்டி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கழிவுநீர் வாய்க்காலின் தடுப்பு சுவரில் படையெடுப்பது போல் அமர்ந்து உள்ளன. இதனால் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்