கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-12-24 17:19 GMT

தர்மபுரி நகரம் வழியாக ஓடும் சனத்குமார் நதி கால்வாய் கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றுடன் இணைகிறது. தர்மபுரியில் இந்த கால்வாய் செல்லும் பகுதியில் பல இடங்களில் புதர்கள், முள் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதேபோல் இந்த கால்வாயில் பல இடங்களில் கழிவுநீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயின் கரையோர பகுதிகள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்கவும், கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கால்வாய் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்