பாதாள சாக்கடையில் உடைப்பு

Update: 2023-12-24 14:44 GMT
திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் ஒரு இடத்தில் பாதசாக்கடை உடைந்து கழிவுநீர் வெளியே செல்கிறது. இந்த கழிவுநீரில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்லும்போது, அந்த தண்ணீர் பொதுமக்கள் மீது படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருவோர் உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழியில் விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்