கால்வாயில் அடைப்பு

Update: 2023-12-24 12:43 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக நுழைவு வாயிலின் எதிரே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. அதோடு அருகில் உள்ள உணவகங்களில் இருந்து வெளியே வரும் தண்ணீரும் சேர்ந்து விடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாலையும் பழுதடைந்து வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்