சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-12-24 10:30 GMT

மயிலாடுதுறை பகுதி ஆனந்த தாண்டவபுரம் சாலையில் பாதாள சாக்கடை கழவுநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன்கருதி மேற்கண்ட கழிவுநீர் குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்