தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-17 18:18 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் விளக்கூர் கிராமம் 6-வது வார்டில் சாலை, வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தெருவில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சாலை, வடிகால் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்