தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-17 10:51 GMT

திருச்சி மாவட்டம், இனாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமலும், கால்வாய் அமைக்கும் பணி முழுமை அடையாமலும் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்