செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட நூத்தஞ்சேரியில், மாணிக்கம் நகர், ஜாய்நகர், ஜோதி நகர், அபீஸ் ரமணி கார்டன், பாலா கார்டன், சாய் ராம் நகர் ஆகிய அணைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் அமைக்க படாமல் உள்ளது. எனவே, மழைநீர் வேளியேற முடியாமல் காலிவீட்டு மணைகளில் தேங்கி நிற்கிறது. மேலும், கடந்த 3 மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வடி கால்வாய் அமைக்க வேண்டும்.