செங்கல்பட்டு மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி, வில்லியம்பாக்கம் சத்தியா தெருவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயில் அப்பகுதி மக்கள் கழிவுநீரை திறந்து விடுவதால் அதிக கொசுக்கள் பரவுகிறது. எனவே, கொசு உற்பத்தியாகாமல் தடுக்க மழைநீர் வடிகால்வாயை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.