தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-11-26 12:50 GMT

அரியலூர் மாவட்டம், விளாங்குடி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து டி.பலூன் செல்லும் சிமெண்டு சாலை தற்போது மண் சாலையாக காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்