கழிவுநீர் தேக்கம்

Update: 2023-11-05 14:08 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் இருந்து பாரதிநகர் செல்லும் வழியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் அதனுடன் மழைநீரும் சேர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகளவில் காணப்படுகிறது மற்றும் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 

மேலும் செய்திகள்