செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் ஆதிதிராவிடர் அரசு நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அந்த பகுதியில் பள்ளி இருப்பதால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும், துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்யை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.