வடிகால் வசதி தேவை

Update: 2023-10-22 08:37 GMT

நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட பேயன்குழியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அருகில் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிந்தோட அந்த சாலையில் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்