வடிகாலை தூர்வாருவது அவசியம்

Update: 2023-10-15 18:05 GMT
கடலூர் வன்னியர்பாளையம் அண்ணா சிலை அருகில் உள்ள வடிகால் வெகுநாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுநீர் குடியிருப்புகளில் புகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே வடிகாலை உடனடியாக தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்