தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2023-10-15 13:25 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியின் அருகே கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் மண் நிரம்பி கழிவுநீர் செல்லாத வகையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயை தூர்வாரி செப்பனிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்