கழிப்பிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா ?

Update: 2023-10-08 17:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மல்லப்பாடியில் ரேஷன் கடை அருகில் 15-க்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பிட கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. கழிப்பிடம் புதர் மண்டி கிடப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்