குப்பை நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-10-08 12:19 GMT

குப்பை நிரம்பி வழியும்

கழிவுநீர் கால்வாய்

திருப்பூர் அவினாசி ரோடு ஸ்டேன்ஸ் வீதி அருகே சரவணா வீதி உள்ளது. இங்கு அவினாசி ரோட்டுக்கும், பி.என். ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் கால்வாய் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. நீண்ட தூரத்திற்கு குப்பை மற்றும் மண் நிரம்பி இருப்பதால் கழிவு நீர் பாய்வதில் தடை ஏற்பட்டு ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதேபோல் நாட்கணக்காக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகியுள்ளன. எனவே இங்கு நிரம்பி வழியும் குப்பைகள் விரைந்து அப்புறப்படுத்தப்படுமா?

பிரபு,திருப்பூர்.

8767376383

மேலும் செய்திகள்