பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2023-09-27 11:35 GMT
கரூர் மாவட்டம் சேமங்கி எம்.ஜி.ஆர். நகர் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது கழிவு நீர் குழாய் உடைந்து வெளியே செல்ல முடியாமல் உள்ளது. இதனால் சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்