சுகாதார சீர்கேட்டில் பஸ் நிலையம்

Update: 2023-09-27 10:23 GMT
கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஓசூர், பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. அதேபோல ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகங்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்