தூர்வார வேண்டிய கழிவுநீர் கால்வாய்

Update: 2023-09-24 16:21 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் ஜிங்கலூர் பஸ் நிலையத்தை அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்