தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-09-24 13:16 GMT

தஞ்சையை அடுத்த தொண்டராயன்பாடி கிராமம் காலனி தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் குப்பைகள், கற்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வடிந்தோட வழியின்றி வடிகாலுக்குள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்