பெருகி ஓடும் சாக்கடை

Update: 2023-09-20 14:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி வார்டு 20-க்கு உள்பட்ட கீழ்கட்டளை சுப்ரமணி நகர் (மசூதி தெரு), பாண்டியன் நகர் பகுதிகளின் தெருக்களில் சாக்கடை வழிந்தோடுகிறது. பாதாள சாக்கடையின் மூடிகள் வழியே கசிந்து வெளியேறி தெருவெங்கும் சாக்கடைநீர் குளம் போல் காட்சி அளிக்கிறது. மற்றத் தெருக்களில் உள்ள சாக்கடை பின்னோக்கி (ரிவர்ஸ்) வந்து கீழ்கட்டளை சுப்பிரமணிய நகர், பாண்டியன் நகர் தெருக்களிலும், அனைத்து வீடுகளிலும் புகுந்துவிடுகிறது. மற்றத் தெருக்களைவிட மிகவும் தாழ்வாக இங்கு பாதாள சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு இருப்பதுதான் இதற்கு காரணம் என்று தெரியவருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிலைதான் இங்கு நிலவுகிறது. இதில் நடந்து செல்லும் குழந்தைகளுக்கு சேற்றுப்புண் வருகிறது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை. டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்களுக்கு இது வழிவகுக்கும். இதுபற்றி அனைத்து மட்டங்களிலும் புகார் தெரிவித்து வருகிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்