கொசுத்தொல்லை

Update: 2023-08-13 10:45 GMT

கோவை சலீவன் வீதியில் காமாட்சி அம்மன் கோவில் எதிரே சாக்கடை கால்வாய் உள்ளது. இதன் மீது பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக மேல் மூடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மூடி உடைந்து கிடக்கிறது. மேலும் கழிவுநீரும் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்