சுகாதாரக்கேடு

Update: 2022-10-02 18:45 GMT

திருச்செந்தூர் நகருக்குள் மேல்புறம் ஆவுடையார்குளம் வடிநீர் கால்வாய் முந்தைய காலத்தில் திருச்செந்தூர் பகுதி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது பல ஆண்டுகளாக இந்த வடிநீர் கால்வாயில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடுடன் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்