திருச்செந்தூர் வடக்கு ரதவீதி முடியும் இடத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் அந்த கழிவுநீரில் நடந்து செல்லும் அவலமும் உள்ளது. எனவே, இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.