திறந்த வெளி கால்வாயில் கொசு உற்பத்தி

Update: 2023-06-25 17:00 GMT

ஆற்காடு நகரம் வாத்தியார் கோவிந்தராஜ் தெரு, நாகாத்தமன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் திறந்த வெளியாக உள்ளது. அதில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. தற்காலிக நடவடிக்கையாக கால்வாயை தூர்வார வேண்டும். மிக விரைவில் புதிதாக கால்வாய் கட்டி மூடி போட வேண்டும்.

-பொதுமக்கள், ஆற்காடு.  

மேலும் செய்திகள்