கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

Update: 2023-03-08 11:53 GMT



வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் குடிநீர்தொட்டி உள்ளது. இதில் இருந்து பொதுமக்கள் குடிநீர் பிடித்து வருகிறார்கள். கடந்த பல மாதங்களாக இந்த குடிநீர் தொட்டி பகுதியில் கழிவு நீர் செல்வதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்